திருக்குறள்- குறள் 484

4 / 100

குறள் எண் : 484

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்….

சாலமன் பாப்பையா உரை:

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *