திருக்குறள்- குறள் 507

4 / 100

குறள் எண் : 507

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்….

சாலமன் பாப்பையா உரை:

றியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *