திருக்குறள்- குறள் 512

4 / 100

குறள் எண் : 512

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *