திருக்குறள்- குறள் 531

8 / 100

குறள் எண் : 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்….

சாலமன் பாப்பையா உரை:

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *