திருக்குறள்- குறள் 546

4 / 100

குறள் எண் : 546

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்….

சாலமன் பாப்பையா உரை:

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *