திருக்குறள்- குறள் 601

8 / 100

குறள் எண் : 601

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *