திருக்குறள்- குறள் 61

   

குறள் எண் : 61

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த                                  மக்கட்பே றல்ல பிற

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *