திருக்குறள்- குறள் 625

8 / 100

குறள் எண் : 625

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்....

சாலமன் பாப்பையா உரை:

ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *