திருக்குறள்- குறள் 664

8 / 100

குறள் எண் : 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.....

சாலமன் பாப்பையா உரை:

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *