திருக்குறள்- குறள் 723

8 / 100

குறள் எண் : 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே..

சாலமன் பாப்பையா உரை:

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *