திருக்குறள்- குறள் 160

குறள் எண் : 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக... Read more

திருக்குறள்- குறள் 159

குறள் எண் : 159 துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப்... Read more

திருக்குறள்- குறள் 158

குறள் எண் : 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஆணவங் கொண்டு... Read more

திருக்குறள்- குறள் 157

குறள் எண் : 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது….. சாலமன் பாப்பையா உரை: கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால்... Read more

திருக்குறள்- குறள் 156

குறள் எண் : 156 ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ... Read more

திருக்குறள்- குறள் 155

குறள் எண் : 155 ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு... Read more

திருக்குறள்- குறள் 154

குறள் எண் : 154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.... Read more

திருக்குறள்- குறள் 153

குறள் எண் : 153 இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்…. சாலமன் பாப்பையா உரை: வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப்... Read more

திருக்குறள்- குறள் 152

குறள் எண் : 152 பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது…. சாலமன் பாப்பையா உரை: தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக்... Read more

திருக்குறள்- குறள் 151

குறள் எண் : 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப்... Read more