திருக்குறள்- குறள் 154

குறள் எண் : 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *