திருக்குறள்- குறள் 270

குறள் எண் : 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய... Read more

திருக்குறள்- குறள் 269

குறள் எண் : 269 கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்…. சாலமன் பாப்பையா உரை: தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 268

குறள் எண் : 268 தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்…. சாலமன் பாப்பையா உரை: தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும்... Read more

திருக்குறள்- குறள் 267

குறள் எண் : 267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்…. சாலமன் பாப்பையா உரை: நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம்... Read more

திருக்குறள்- குறள் 266

குறள் எண் : 266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே…. சாலமன் பாப்பையா உரை: தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை... Read more

திருக்குறள்- குறள் 265

குறள் எண் : 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்…. சாலமன் பாப்பையா உரை: விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 264

குறள் எண் : 264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் எண்ணின் தவத்தான் வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.... Read more

திருக்குறள்- குறள் 263

குறள் எண் : 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்கள் தவம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ…. சாலமன் பாப்பையா உரை: துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.... Read more

திருக்குறள்- குறள் 262

குறள் எண் : 262 தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்…. சாலமன் பாப்பையா உரை: முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது... Read more

திருக்குறள்- குறள் 261

குறள் எண் : 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது... Read more