திருக்குறள்- குறள் 1310

குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என்... Read more

திருக்குறள்- குறள் 1309

குறள் எண் : 1309 நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை... Read more

திருக்குறள்- குறள் 1308

குறள் எண் : 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர்... Read more

திருக்குறள்- குறள் 1307

குறள் எண் : 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு... Read more

திருக்குறள்- குறள் 1306

குறள் எண் : 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். சாலமன் பாப்பையா உரை: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல்... Read more

திருக்குறள்- குறள் 1305

குறள் எண் : 1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற... Read more

திருக்குறள்- குறள் 1304

குறள் எண் : 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது,... Read more

திருக்குறள்- குறள் 1303

குறள் எண் : 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே... Read more

திருக்குறள்- குறள் 1302

குறள் எண் : 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை... Read more

திருக்குறள்- குறள் 1301

குறள் எண் : 1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. சாலமன் பாப்பையா உரை: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால்... Read more