திருக்குறள்- குறள் 1309

8 / 100

குறள் எண் : 1309

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *