திருக்குறள்- குறள் 700

குறள் எண் : 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை... Read more

திருக்குறள்- குறள் 699

குறள் எண் : 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று... Read more

திருக்குறள்- குறள் 698

குறள் எண் : 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும்... Read more

திருக்குறள்- குறள் 697

குறள் எண் : 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும்... Read more

திருக்குறள்- குறள் 696

குறள் எண் : 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக்... Read more

திருக்குறள்- குறள் 695

குறள் எண் : 695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன... Read more

திருக்குறள்- குறள் 694

குறள் எண் : 694 செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர்... Read more

திருக்குறள்- குறள் 692

குறள் எண் : 692 மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த... Read more

திருக்குறள்- குறள் 691

குறள் எண் : 691 அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட... Read more