திருக்குறள்- குறள் 697

8 / 100

குறள் எண் : 697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *