திருக்குறள்- குறள் 650

குறள் எண் : 650 இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரிந்துரையா தார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்…. சாலமன் பாப்பையா உரை: தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர்,... Read more

திருக்குறள்- குறள் 649

குறள் எண் : 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்…. சாலமன் பாப்பையா உரை: குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 648

குறள் எண் : 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்….. சாலமன் பாப்பையா உரை: சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால்,... Read more

திருக்குறள்- குறள் 647

குறள் எண் : 647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது…. சாலமன் பாப்பையா உரை: தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன்,... Read more

திருக்குறள்- குறள் 646

குறள் எண் : 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்….. சாலமன் பாப்பையா உரை: பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக்... Read more

திருக்குறள்- குறள் 645

குறள் எண் : 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 644

குறள் எண் : 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங் கில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம்,... Read more

திருக்குறள்- குறள் 643

குறள் எண் : 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்…. சாலமன் பாப்பையா உரை: நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு... Read more

திருக்குறள்- குறள் 642

குறள் எண் : 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல்... Read more

திருக்குறள்- குறள் 641

குறள் எண் : 641 நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று…. சாலமன் பாப்பையா உரை: நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு... Read more
Index