திருக்குறள்- குறள் 550

குறள் எண் : 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்…. சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச்... Read more

திருக்குறள்- குறள் 549

குறள் எண் : 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று…. சாலமன் பாப்பையா உரை: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின்... Read more

திருக்குறள்- குறள் 548

குறள் எண் : 548 எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார்... Read more

திருக்குறள்- குறள் 547

குறள் எண் : 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 546

குறள் எண் : 546 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான... Read more

திருக்குறள்- குறள் 545

குறள் எண் : 545 இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே... Read more

திருக்குறள்- குறள் 544

குறள் எண் : 544 குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்…. சாலமன் பாப்பையா உரை: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள்... Read more

திருக்குறள்- குறள் 543

குறள் எண் : 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 542

குறள் எண் : 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்…. சாலமன் பாப்பையா உரை: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான... Read more

திருக்குறள்- குறள் 541

குறள் எண் : 541 ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்…. சாலமன் பாப்பையா உரை: குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி... Read more