திருக்குறள்- குறள் 501

குறள் எண் : 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு... Read more

திருக்குறள்- குறள் 470

குறள் எண் : 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால்... Read more

திருக்குறள்- குறள் 469

குறள் எண் : 469 நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்…. சாலமன் பாப்பையா உரை: அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 468

குறள் எண் : 468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப்... Read more

திருக்குறள்- குறள் 467

குறள் எண் : 467 எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக.... Read more

திருக்குறள்- குறள் 466

குறள் எண் : 466 செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். கலைஞர் மு.கருணாநிதி உரை: செய்யக்... Read more

திருக்குறள்- குறள் 465

குறள் எண் : 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்…. சாலமன் பாப்பையா உரை: முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச்... Read more

திருக்குறள்- குறள் 464

குறள் எண் : 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச்... Read more

திருக்குறள்- குறள் 463

குறள் எண் : 463 ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற... Read more

திருக்குறள்- குறள் 462

குறள் எண் : 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச்... Read more