திருக்குறள்- குறள் 466

4 / 100

குறள் எண் : 466

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்….

சாலமன் பாப்பையா உரை:

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *