திருக்குறள்- குறள் 830

குறள் எண் : 830 பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும்... Read more

திருக்குறள்- குறள் 829

குறள் எண் : 829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி,... Read more

திருக்குறள்- குறள் 828

குறள் எண் : 828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. சாலமன் பாப்பையா உரை: பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 827

குறள் எண் : 827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது. சாலமன் பாப்பையா உரை: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே;... Read more

திருக்குறள்- குறள் 826

குறள் எண் : 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். சாலமன் பாப்பையா உரை: நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே... Read more

திருக்குறள்- குறள் 825

குறள் எண் : 825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப... Read more

திருக்குறள்- குறள் 824

குறள் எண் : 824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு... Read more

திருக்குறள்- குறள் 823

குறள் எண் : 823 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி... Read more

திருக்குறள்- குறள் 822

குறள் எண் : 822 இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். சாலமன் பாப்பையா உரை: வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு... Read more

திருக்குறள்- குறள் 821

குறள் எண் : 821 சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத்... Read more