திருக்குறள்- குறள் 810

குறள் எண் : 810 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர். சாலமன் பாப்பையா உரை: பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை... Read more

திருக்குறள்- குறள் 809

குறள் எண் : 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். சாலமன் பாப்பையா உரை: உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை... Read more

திருக்குறள்- குறள் 808

குறள் எண் : 808 கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும். சாலமன் பாப்பையா உரை: நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர்... Read more

திருக்குறள்- குறள் 807

குறள் எண் : 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர். சாலமன் பாப்பையா உரை: தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர்... Read more

திருக்குறள்- குறள் 806

குறள் எண் : 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார். சாலமன் பாப்பையா உரை: நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால்... Read more

திருக்குறள்- குறள் 805

குறள் எண் : 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும்... Read more

திருக்குறள்- குறள் 804

குறள் எண் : 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர். சாலமன் பாப்பையா உரை: தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே... Read more

திருக்குறள்- குறள் 803

குறள் எண் : 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும். சாலமன் பாப்பையா உரை: தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச்... Read more

திருக்குறள்- குறள் 802

குறள் எண் : 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும். சாலமன் பாப்பையா உரை: நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 801

குறள் எண் : 801 பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும். சாலமன் பாப்பையா உரை: பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால... Read more