திருக்குறள்- குறள் 739

8 / 100

குறள் எண் : 739

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல..

சாலமன் பாப்பையா உரை:

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *