திருக்குறள்- குறள் 742

8 / 100

குறள் எண் : 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *