திருக்குறள்- குறள் 846

11 / 100

குறள் எண் : 846

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *