திருக்குறள்- குறள் 935

8 / 100

குறள் எண் : 935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை:

சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *