திருக்குறள்- குறள் 40

குறள் எண் : 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிக்கத்... Read more

திருக்குறள்- குறள் 39

குறள் எண் : 39 அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை…. சாலமன் பாப்பையா உரை: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.... Read more

திருக்குறள்- குறள் 38

குறள் எண் : 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தை செய்யாது விட்ட நாள்... Read more

திருக்குறள்- குறள் 37

குறள் எண் : 37 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா…. சாலமன் பாப்பையா உரை: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை.... Read more

திருக்குறள்- குறள் 36

குறள் எண் : 36 அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்…. சாலமன் பாப்பையா உரை: முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச்... Read more

திருக்குறள்- குறள் 35

குறள் எண் : 35 அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை,... Read more

திருக்குறள்- குறள் 34

குறள் எண் : 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை…. சாலமன் பாப்பையா உரை: மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே;... Read more

திருக்குறள்- குறள் 33

குறள் எண் : 33 ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. கலைஞர் மு.கருணாநிதி உரை: செய்யக்கூடிய செயல்கள் எவை... Read more

திருக்குறள்- குறள் 32

குறள் எண் : 32 அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை….. சாலமன் பாப்பையா உரை: அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 31

குறள் எண் : 31 சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?…. சாலமன் பாப்பையா உரை: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும்... Read more