திருக்குறள்- குறள் 1210

குறள் எண் : 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக! சாலமன் பாப்பையா உரை: திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என்... Read more

திருக்குறள்- குறள் 1209

குறள் எண் : 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது. சாலமன் பாப்பையா உரை: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே... Read more

திருக்குறள்- குறள் 1208

குறள் எண் : 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ! சாலமன் பாப்பையா உரை: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும்... Read more

திருக்குறள்- குறள் 1207

குறள் எண் : 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ? சாலமன் பாப்பையா உரை: அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்;... Read more

திருக்குறள்- குறள் 1206

குறள் எண் : 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்? சாலமன் பாப்பையா உரை: அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர்... Read more

திருக்குறள்- குறள் 1205

குறள் எண் : 1205 தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ? சாலமன் பாப்பையா உரை: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும்... Read more

திருக்குறள்- குறள் 1204

குறள் எண் : 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ? சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?... Read more

திருக்குறள்- குறள் 1203

குறள் எண் : 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? சாலமன் பாப்பையா உரை: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத்... Read more

திருக்குறள்- குறள் 1202

குறள் எண் : 1202 எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம்... Read more

திருக்குறள்- குறள் 1201

குறள் எண் : 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும். சாலமன் பாப்பையா உரை: முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும்... Read more