திருக்குறள்- குறள் 1203

8 / 100

குறள் எண் : 1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

சாலமன் பாப்பையா உரை:

எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *