திருக்குறள்- குறள் 1210

8 / 100

குறள் எண் : 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

சாலமன் பாப்பையா உரை:

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *