திருக்குறள்- குறள் 1042

8 / 100

குறள் எண் : 1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *