திருக்குறள்- குறள் 137

குறள் எண் : 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்….

சாலமன் பாப்பையா உரை:

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *