திருக்குறள்- குறள் 139

குறள் எண் : 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்….

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *