திருக்குறள்- குறள் 257

4 / 100

குறள் எண் : 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்….

சாலமன் பாப்பையா உரை:

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *