திருக்குறள்- குறள் 309

4 / 100

குறள் எண் : 309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்….

சாலமன் பாப்பையா உரை:

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *