திருக்குறள்- குறள் 32

குறள் எண் : 32

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை                                    மறத்தலின் ஊங்கில்லை கேடு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை

சாலமன் பாப்பையா உரை:

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *