திருக்குறள்- குறள் 324

4 / 100

குறள் எண் : 324

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்….

சாலமன் பாப்பையா உரை:

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *