திருக்குறள்- குறள் 403

4 / 100

குறள் எண் : 403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்….

சாலமன் பாப்பையா உரை:

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *