திருக்குறள்- குறள் 412

4 / 100

குறள் எண் : 412

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்….

சாலமன் பாப்பையா உரை:

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *