திருக்குறள்- குறள் 422

4 / 100

குறள் எண் : 422

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்….

சாலமன் பாப்பையா உரை:

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *