திருக்குறள்- குறள் 477

4 / 100

குறள் எண் : 477

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்….

சாலமன் பாப்பையா உரை:

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *