திருக்குறள்- குறள் 532

8 / 100

குறள் எண் : 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்….

சாலமன் பாப்பையா உரை:

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *