திருக்குறள்- குறள் 603

8 / 100

குறள் எண் : 603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்….

சாலமன் பாப்பையா உரை:

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *