திருக்குறள்- குறள் 85

குறள் எண் : 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம
மிச்சில் மிசைவான் புலம்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?….

சாலமன் பாப்பையா உரை:

விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *