திருக்குறள்- குறள் 230

குறள் எண் : 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால்... Read more

திருக்குறள்- குறள் 229

குறள் எண் : 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது…. சாலமன் பாப்பையா உரை: பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம்... Read more

திருக்குறள்- குறள் 228

குறள் எண் : 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ…. சாலமன் பாப்பையா உரை: சாலமன் பாப்பையா விளக்க உரை:... Read more

திருக்குறள்- குறள் 227

குறள் எண் : 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய்... Read more

திருக்குறள்- குறள் 226

குறள் எண் : 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப்... Read more

திருக்குறள்- குறள் 225

குறள் எண் : 225 ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்…. சாலமன் பாப்பையா உரை: வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே... Read more

திருக்குறள்- குறள் 224

குறள் எண் : 224 இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது…. சாலமன் பாப்பையா உரை: கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த... Read more

திருக்குறள்- குறள் 223

குறள் எண் : 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத்... Read more

திருக்குறள்- குறள் 222

குறள் எண் : 222 நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது…. சாலமன் பாப்பையா உரை: நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது... Read more

திருக்குறள்- குறள் 221

குறள் எண் : 221 வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும்... Read more