திருக்குறள்- குறள் 310

குறள் எண் : 310 இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்…. சாலமன் பாப்பையா உரை: பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத்... Read more

திருக்குறள்- குறள் 309

குறள் எண் : 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 308

குறள் எண் : 308 இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது…. சாலமன் பாப்பையா உரை: பல சுடரை உடைய பெருநெருப்பு நம்... Read more

திருக்குறள்- குறள் 307

குறள் எண் : 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக்... Read more

திருக்குறள்- குறள் 306

குறள் எண் : 306 சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்…. சாலமன் பாப்பையா உரை: சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 305

குறள் எண் : 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல்... Read more

திருக்குறள்- குறள் 304

குறள் எண் : 304 நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?… சாலமன் பாப்பையா உரை: முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ? கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 303

குறள் எண் : 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்…. சாலமன் பாப்பையா உரை: தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.... Read more

திருக்குறள்- குறள் 302

குறள் எண் : 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும்... Read more

திருக்குறள்- குறள் 301

குறள் எண் : 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?… சாலமன் பாப்பையா உரை: எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே... Read more