திருக்குறள்- குறள் 490

குறள் எண் : 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மு.வ விளக்க உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒடுங்கி இருக்க... Read more

திருக்குறள்- குறள் 489

குறள் எண் : 489 எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான்... Read more

திருக்குறள்- குறள் 488

குறள் எண் : 488 செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை... Read more

திருக்குறள்- குறள் 487

குறள் எண் : 487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்…. சாலமன் பாப்பையா உரை: தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத்... Read more

திருக்குறள்- குறள் 486

குறள் எண் : 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும்... Read more

திருக்குறள்- குறள் 485

குறள் எண் : 485 காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்…. சாலமன் பாப்பையா உரை: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 484

குறள் எண் : 484 ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்…. சாலமன் பாப்பையா உரை: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும்... Read more

திருக்குறள்- குறள் 483

குறள் எண் : 483 அருவினை யென்ப உளவோ கருவியாற் கால மறிந்து செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ…. சாலமன் பாப்பையா உரை: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு... Read more

திருக்குறள்- குறள் 482

குறள் எண் : 482 பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்  தீராமை ஆர்க்குங் கயிறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்…. சாலமன் பாப்பையா உரை: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு... Read more

திருக்குறள்- குறள் 481

குறள் எண் : 481 பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை... Read more