திருக்குறள்- குறள் 450

குறள் எண் : 450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக்... Read more

திருக்குறள்- குறள் 449

குறள் எண் : 449 முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்  சார்பிலார்க் கில்லை நிலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே... Read more

திருக்குறள்- குறள் 448

குறள் எண் : 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்….. சாலமன் பாப்பையா உரை: தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத... Read more

திருக்குறள்- குறள் 447

குறள் எண் : 447 இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்…. சாலமன் பாப்பையா உரை: தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக்... Read more

திருக்குறள்- குறள் 446

குறள் எண் : 446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும்... Read more

திருக்குறள்- குறள் 445

குறள் எண் : 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே... Read more

திருக்குறள்- குறள் 444

குறள் எண் : 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் <br>வன்மையு ளெல்லாந் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர்... Read more

திருக்குறள்- குறள் 443

குறள் எண் : 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்…. சாலமன் பாப்பையா உரை: துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள்... Read more

திருக்குறள்- குறள் 442

குறள் எண் : 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல்... Read more

திருக்குறள்- குறள் 441

குறள் எண் : 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை,... Read more