திருக்குறள்- குறள் 600

குறள் எண் : 600 உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு…. சாலமன் பாப்பையா உரை: ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ... Read more

திருக்குறள்- குறள் 599

குறள் எண் : 599 பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்…. சாலமன் பாப்பையா உரை: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால்... Read more

திருக்குறள்- குறள் 598

குறள் எண் : 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்…. சாலமன் பாப்பையா உரை: ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப்... Read more

திருக்குறள்- குறள் 597

குறள் எண் : 597 சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன்... Read more

திருக்குறள்- குறள் 596

குறள் எண் : 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது…. சாலமன் பாப்பையா உரை: நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும்,... Read more

திருக்குறள்- குறள் 595

குறள் எண் : 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு…. சாலமன் பாப்பையா உரை: நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின்... Read more

திருக்குறள்- குறள் 594

குறள் எண் : 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்…. சாலமன் பாப்பையா உரை: தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.... Read more

திருக்குறள்- குறள் 593

குறள் எண் : 593 ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று... Read more

திருக்குறள்- குறள் 592

குறள் எண் : 592 உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஊக்கம் எனும்... Read more

திருக்குறள்- குறள் 591

குறள் எண் : 591 உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ…. சாலமன் பாப்பையா உரை: ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை... Read more